டுவிட்டரில் இருந்து விலகிய சிம்பு

டுவிட்டரில் இருந்து விலகிய சிம்பு

‘வாலு’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து சிம்பு இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு வருகிறார். தமிழ் நடிகர்களில் டுவிட்டரில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர்களில் முதன்மையானவர் சிம்பு. ஆனால் இனி டுவிட்டரில் தொடரப் போவதில்லை என இன்று அவர் அறிவித்து உள்ளார்.

இது குறித்து சிம்பு கூறும்போது, ‘இதுவரை என் ரசிகர்களும், என் நண்பர்களும் என்னை டுவிட்டரில் தொடர்ந்தவாறு இருந்தமைக்கு நன்றி. இன்று முதல் எனது டுவிட்டர் பக்கம் ரசிகர் மன்ற நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படும். தேவைப்பட்டால் மட்டுமே நான் என் கருத்தை பதிவு செய்வேன்.

ஒரு நடிகனாக என்னுடைய கடமை என் ரசிகனுக்கு நல்ல தரமான படம் கொடுக்க வேண்டும் என்பது தான். அவர்களுடனான என்னுடைய தொடர்பு வெற்றிப் படம் மட்டும்தானே தவிர இதைப் போன்ற சமூக வலை தளங்களில் இல்லை என்பதையும் நான் உணர்ந்துக் கொண்டேன். என்னுடைய இந்த முடிவை என் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை’ என்றார்.