நயன்தாரா மீது புகார் அளிக்கவில்லை : சிம்பு விளக்கம்

நயன்தாரா மீது புகார் அளிக்கவில்லை : சிம்பு விளக்கம்

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்படவுள்ளதால், இப்படத்தின் நாயகியான நயன்தாரா, இதில் நடித்துக் கொடுக்கும்படி கேட்டதாகவும், அதற்கு நயன்தாரா மறுத்ததாகவும், இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் நயன்தாரா மீது இப்படத்தின் தயாரிப்பாளரான டி.ராஜேந்தர் புகார் கொடுத்தாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், நயன்தாரா மீது புகார் கொடுத்ததாக வந்த செய்தியை நடிகர் சிம்பு மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, என்னுடைய அப்பாவும், ‘இது நம்ம ஆளு’ படத்தின் தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சங்கத்தில் நயன்தாரா குறித்து புகார் ஏதும் கூறவில்லை.

நயன்தாராவின் சம்பளப் பாக்கி ரூ. 50 லட்சம் தயாரிப்பாளர் வசம் இருந்தது. அதை நயன்தாராவிடம் கொடுத்துவிட்டு, அவரிடம் இப்படத்தில் எடுக்க வேண்டிய இரண்டு பாடல்களுக்காக தேதிகள் ஒதுக்கித் தருமாறு கேட்க விரும்பினோம். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

எனவே, தயாரிப்பாளர் சங்கத்திடம் அந்த தொகையை கொடுத்து, நயன்தாராவிடம் ஒப்படைத்து, தங்களுக்கு தேதிகள் ஒதுக்கித் தர நயன்தாராவிடம் கேட்குமாறு கூறினோம். இது ஒரு வேண்டுகோளாக வைத்தோமே தவிர, அவர்மீது நாங்கள் புகார் எதுவுமே கூறவில்லை.

நயன்தாரா இந்த பாடல்களுக்கு நடிக்க ஒப்புக்கொண்டால், பாடல்களை படமாக்குவோம். இல்லையென்றால், படத்தை அந்த பாடல்கள் இல்லாமலேயே வெளியிடுவோம். நான் யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. என்னுடைய புதிய படமும், இனி வரும் படங்களும்தான் என்னுடைய மனதில் உள்ளது. நயன்தாரா, எனக்கு எப்போதுமே நல்ல தோழியாக இருந்திருக்கிறார். இனியும் இருப்பார் என்று கூறினார்.