இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, நான் ‘புலி’ படத்தில் இளவரசியாக நடிக்கிறேன். இந்த வேடத்திற்காக எனக்கு 3 மணி நேரம் மேக்கப் போட்டார்கள். மேலும், பட்டு உடை, கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து நடித்திருக்கிறேன். என்னுடைய கேரக்டரை பார்த்து ஸ்ரீதேவி அசந்துட்டாங்க. மேலும், இந்த படத்தை பற்றி எதுவும் சத்தமாக பேசக்கூடாது என்று இயக்குனர் கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார். தமிழ் சினிமாவில் இதுமாதிரி படம் வந்ததில்லை. இனி வரவும் முடியாதுன்னு பேசிக்கிறாங்க. இதை கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்றார்.
இப்படத்தில் ஹன்சிகாவுடன், ஸ்ருதிஹசன், ஸ்ரீதேவி கபூர், சுதீப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிம்புதேவன் இயக்கியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஆடியோவை விரைவில் வெளியிடவுள்ளனர். விநாயகர் சதுர்த்தியன்று படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.