நடிகைகள் கவர்ச்சியால் மட்டும் சினிமாவில் நீடிக்க முடியாது: தமன்னா

நடிகைகள் கவர்ச்சியால் மட்டும் சினிமாவில் நீடிக்க முடியாது: தமன்னா

தமன்னா அளித்த பேட்டி வருமாறு:- “நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம். அதே நேரம் கவர்ச்சியை மட்டுமே வைத்து சினிமாவில் நிலைக்க முடியும் என்று கருதினால் ஏமாற்றம்தான் மிஞ்சும். கவர்ச்சியும், நடிப்பு திறமையும் இருந்தால்தான் மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ள முடியும். சினிமாவில் முந்தைய காலங்களில் எளிதாக நுழைய முடியாது. இப்போது அப்படி இல்லை. யார் வேண்டுமானாலும் வரலாம். முதல் படத்தில்தான் அவர்களால் கஷ்டம் இல்லாமல் அறிமுகமாக முடியும். தொடர்ந்து பட வாய்ப்புகள் வர வேண்டுமானால் திறமை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓரம் கட்டி விடுவார்கள். சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் போராட வேண்டும். நான் சினிமாவுக்கு வந்து பல நடிகர்களுடன் நடித்து விட்டேன். மூத்த கதாநாயகர்கள், இளம் நாயகர்கள் ஜோடியாக நடித்து இருக்கிறேன். அவர்களுடன் இதுவரை எந்த கருத்து வேறுபாடோ, கசப்பான அனுபவங்களோ ஏற்பட்டது இல்லை. எல்லோரும் கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறார்கள். தாங்கள் நடித்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

The post நடிகைகள் கவர்ச்சியால் மட்டும் சினிமாவில் நீடிக்க முடியாது: தமன்னா appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

நடிகைகள் கவர்ச்சியால் மட்டும் சினிமாவில் நீடிக்க முடியாது: தமன்னா