விஷால் படப்பிடிப்பு வேலைகளில் பிசியாக இருந்தாலும், தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக பள்ளி குழந்தைகள் மற்றும் கல்விக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறார். இவருக்கு நாளை பிறந்தநாள். இந்த ஆண்டு பிறந்த நாளை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட இருக்கிறார். மேலும் பிறந்த நாளை முன்னிட்டு இனிமேல் பார்ட்டிகளில் கலந்துக் கொள்வதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறார். கல்வி, பள்ளி குழந்தைகள் மீது அதிக ஆர்வம் இருக்கிறதாம். இதனால் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய இருப்பதாகவும் சபதம் எடுத்திருக்கிறார்.
விஷாலுக்கு இன்றைய இளம் நடிகர்களான, ஆர்யா, விஷ்ணு, விக்ராந்த் உள்ளிட்ட பலர் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இவர்களுடைய படங்களின் வெற்றி, பிறந்த நாள் விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு பார்ட்டி கொடுப்பது வழக்கம். ஆனால், இனிமேல் விஷால் பார்ட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று சபதம் எடுத்திருப்பதால், இவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.