விஜய்–அஜித்துடன் டூயட் பாட ஆசை: ராகுல் பிரீத் சிங்

விஜய்–அஜித்துடன் டூயட் பாட ஆசை: ராகுல் பிரீத் சிங்

ராம்சரண் – ராகுல் பிரீத் சிங் நடித்துள்ள ‘புரூஸ்–2’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொள்வதாக இருந்த ராம்சரண் கடைசி நேரத்தில் வரவில்லை. ஆனால் இந்த படத்தின் நாயகி ரகுல் பிரீத்தி விழாவில் கலந்து கொண்டு கலகலப்பாக பேசினார்.

தமிழில் அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ படத்தில் அறிமுகமான ராகுல் பிரீத் சிங் அடுத்து ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ படங்களில் நடித்தார். என்றாலும் தமிழில் எதிர்பார்த்தபடி படங்கள் அமையவில்லை. இப்போது இவர் ராம்சரணுடன் நடித்த ‘புரூஸ்லி–2’ தெலுங்கு, தமிழ் இரண்டிலும் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்குப் பிறகு தனக்கு தமிழ் பட உலகில் நல்ல இடம் கிடைக்கும் என்று ராகுல் பிரீத்சிங் நம்புகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:– தமிழ் பட உலகின் மீது எனக்கு அதிக விருப்பம் உள்ளது. விஜய், அஜித், சூர்யா போன்ற நாயகர்களுடன் டூயட் பாட வேண்டும் என்பது எனது ஆசை. விரைவில் அது நிறைவேறும் என்று நம்புகிறேன். அதற்கு இந்த படம் வழிவகுக்கும் என்றார்.