கோவி இயக்கவுள்ள இப்படம் ஒரு பெண்ணை மையப்படுத்திய கதை என்பதால், திரிஷாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. போஸ்டர்களும் திரிஷாவை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திரிஷா இதுவரை நடிக்காத, பவர்புல் கதாபாத்திரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், மனோபாலா, கோவை சரளா, செண்ட்ராயன், ஜெயப்பிரகாஷ், பிரமானந்த தாகூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. இதில், திரிஷா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைக்கிறார்கள்.
திகில் நிறைந்த காமெடி படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து 45 நாட்கள் நடத்த முடிவு செய்துள்ளனர். முதற்கட்ட படப்பிடிப்பை புனேயிலும், அடுத்தகட்டமாக சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் படமாக்க உள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகவிருக்கிறது. இப்படத்தை திரிஷாவின் மேனேஜர் கிரிதர், கிரிதர் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.