அஜித் பட நாயகியுடன் ஜோடி சேரும் அசோக் செல்வன்

அஜித் பட நாயகியுடன் ஜோடி சேரும் அசோக் செல்வன்

அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘என்னை அறிந்தால்’. இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுஷ்கா நடித்திருந்தார்கள். இவர்களை தவிர மற்றொரு நாயகியாக பார்வதி நாயர் நடித்திருந்தார். இவர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் பார்வதி நாயரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. பார்வதி நாயர் அருண் விஜய்யுடன் இணைந்து வில்லத்தனத்தில் மிரட்டியிருந்தார். இப்படத்தை தொடர்ந்து பார்வதி நாயருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

தற்போது இவர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இவர்கள் நடிக்க இருக்கும் படத்திற்கு ‘பிறை தேடிய நாட்கள்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ரொமண்டிக் கதையாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.