இப்படத்தை நடிகர் அருண்பாண்டியன் வழங்க, ஏ ஆண்ட் பி குரூப்ஸ் சார்பாக கவிதா பாண்டியன், எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்கின்றனர். சத்யசிவா இப்படத்தை இயக்கியுள்ளார். கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ‘நல்லவனா கெட்டவனா ஆம்பள தெரியாமத் தான் தவிக்கிறாடா பொம்பள…’ என்ற பாடலை உருவாக்குவதற்கு முன்பாகவே எஸ்.ஜே.சூர்யா கேட்டிருக்கிறார்.
இந்த பாடல் எஸ்.ஜே.சூர்யாவிற்கு பிடித்துப் போக, இந்த பாடலின் படப்பிடிப்பு எப்போது, எங்கு நடந்தாலும் சொல்லுங்கள் நான் வந்து பார்க்கணும் என்று இயக்குனரிடம் கேட்டிருக்கிறார். அதுபோல் இப்பாடலை மகாபலிபுரம் அருகே படமாக்கப்படும் போது எஸ்.ஜே.சூர்யா வந்து படப்பிடிப்பை பார்த்து பாராட்டி சென்றிருக்கிறார்.
நடிகை லஷ்மி மகள் ஐஸ்வர்யா முதன் முதலாக இந்த படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆடியிருக்கிறார். செப்டம்பர் மாதம் 4ம் தேதி உலகமெங்கும் படம் வெளியாகிறது.