இனி சிம்புவுக்கு நல்ல நேரம்தான்: டி.ஆர் கணித்த ஆரூடம்

இனி சிம்புவுக்கு நல்ல நேரம்தான்: டி.ஆர் கணித்த ஆரூடம்

இயக்குனரும், நடிகர் சிம்புவின் அப்பாவுமான டி.ராஜேந்தர் ஜோதிடத்தின் மீது அபார நம்பிக்கை கொண்டவர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஜோதிடத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார். சினிமாவிலும், சொந்த வாழ்க்கையிலும் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் நல்ல நேரம் பார்த்தே செய்யக்கூடியவர்.

அந்த வகையில், இவர் இப்போது ஹீரோவாக நடித்தால் வெற்றி வாய்ப்பு இருக்காது என்பதால்தான் இயக்கி நடிப்பதையே தள்ளி வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்த அளவுக்கு ஜோதிடத்தை முழுதாக நம்பக்கூடியவர்.

இந்நிலையில், இவரது மகன் சிம்பு நடிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக எந்த ஒரு படங்களும் வெளிவராத சூழ்நிலைக்கு கிரகநிலை சரியில்லாததுதான் காரணம் என்று டி.ராஜேந்தர் ஆரூடம் கணித்துள்ளார்.

தற்போது நடைபெறும் குருபெயர்ச்சிக்கு பிறகு இது சரியாகிவிடுமாம். மூன்று ஆண்டுகளுக்கும் சேர்ந்து சிம்பு நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக பெரிய வெற்றிகளை பெறும் என்றும் அவர் கணித்துள்ளார்.

அதனால் இனி, சிம்புவுக்கு நல்ல நேரம் தொடங்கியுள்ளதாம். சமீபத்தில் கிரக தோஷங்களை கழிப்பதற்காக சிம்புவுக்கு ஒரு பெரிய பரிகார பூஜை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.