கூட்டத்தில் ஒருத்தன் படப்பிடிப்பு நிறைவு

கூட்டத்தில் ஒருத்தன் படப்பிடிப்பு நிறைவு

சூது கவ்வும், பீட்சா 2, தெகிடி ஆகிய படங்களில் நடித்த அசோக் செல்வன், தற்போது ‘சவாலே சமாளி, ‘144’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இன்று இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஞானவேல் இயக்கியிருக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்ததையடுத்து, விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் பாடல்களை அடுத்தடுத்து வெளியிட இருக்கிறார்கள்.