இதில் நடிப்பது குறித்து ஜீவன் கூறியதாவது:–
முந்தைய படங்களில் பெண்கள் என்னிடம் ஏமாறுவது போன்ற கேரக்டரில் நடித்தேன். ‘அதிபர்’ படத்தில் மற்றவர்களிடம் நான் ஏமாறுவது போன்ற வேடத்தில் நடிக்கிறேன். இது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகிறது.
நான் ஊரில் இருப்பது இல்லை என்றும், அடிக்கடி வெளிநாடு போய் விடுகிறேன் என்றால் தயாரிப்பாளர்கள் என்னை எளிதில் அணுக முடியவில்லை என்றும் தவறான வதந்திகள் பரவி உள்ளன. நான் சென்னையில்தான் இருக்கிறேன்.
தியாகராய நகரில் நான் 10 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு இடம் எடுத்து தங்கி இருக்கிறேன். எல்லோரும் என்னை எளிதாக அணுகலாம். நிறைய பேரிடம் கதைகளும் கேட்டு வருகிறேன். என்னைப் பற்றிய தவறான வதந்திகளை நம்ப வேண்டாம். டைரக்டர்கள் யார் வேண்டுமானாலும் என்னை சந்தித்து கதை சொல்லலாம். ‘அதிபர்’ நல்ல படமாக வந்துள்ளது. நிறைய திருப்பங்கள் இருக்கும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
‘அதிபர்’ படத்தில் சமுத்திரகனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட் போன்றோரும் நடிக்கின்றனர். டி.சிவகுமார், பி.பி.சரவணன் தயாரிக்கின்றனர்.