லிங்குசாமி வெளியிட டைரக்டர்கள் பாண்டிராஜ், திரு பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் விஷால் பேசியதாவது:–
‘பாயும்புலி’ படம் சிறப்பாக வந்துள்ளது. ஏற்கனவே இருதடவை போலீஸ் கதையில் நடித்துள்ளேன். இது மூன்றாவது படம். சுசீந்திரன் நினைத்ததை அப்படியே திரையில் கொண்டு வந்துள்ளார்.
படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது கிளைமாக்ஸ் சிறப்பாக அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். பாண்டியநாடு படத்தில் அப்படி அமைந்தது. இந்த படத்தின் கிளைமாக்சும் பேசப்படும். இமான் 5 பாடங்களை சிறப்பாக கொடுத்துள்ளார்.
எங்களை மாதிரி நடிகர்களுக்கு நல்ல தயாரிப்பாளர்கள் அமைய வேண்டும். இந்த படத்தில் நல்ல தயாரிப்பாளர் கிடைத்தார். நடிகர்கள் முழு உழைப்பையும் கொடுத்து கஷ்டப்பட்டு நடிக்கிறோம். ஆனால், சில படங்கள் திசைமாறி போய்விடும். குறித்த நேரத்தில் வராது. இந்த தாமதம் வருத்தத்தை ஏற்படுத்தும். பயத்தோடுதான் இந்த படத்தின் வேலைகளையும் துவக்கினோம். முதல்நாளே வேந்தர் மூவிஸ் பயத்தை போக்கிவிட்டது.
இதுஆக்ஷன் கதை. ‘பாயும்புலி’ தலைப்பு பொருத்தமாக இருந்ததால் கேட்டு வாங்கினோம். உண்மை விஷயங்களின் சாயலும் இருக்கும். ‘சிலுக்கு மரமே’ என்ற பாடலை இன்று வெளியிட்டுள்ளோம். எனக்கு பிடித்தமான ‘முயல்குட்டி’ என்ற பாடலும் இப்படத்தில் உள்ளது. காஜல்அகர்வாலுடன் முதல் தடவையாக நடித்துள்ளேன்.
லிங்குசாமியின் சண்டைக்கோழி 2–ம் பாகத்திலும் நடிக்க இருக்கிறேன்.
இவ்வாறு விஷால் பேசினார்.
இசையமைப்பாளர் இமான், நடிகர்கள் சூரி, ஜெயப்பிரகாஷ், தயாரிப்பாளர்கள் டி.சிவா, மதன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், கலை இயக்குனர் ராஜீவன், வி.மியூசிக் ஜஸ்வர்யா, ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், விஷால் பிலிம் பேக்டரி மானேஜர் எம்.எஸ்.முருகராஜ், விஷால் ரசிகர்மன்ற தலைவர் ஜெயசீலன், செயலாளர் ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.