மன்சூர் அலிகான் ஆவேசம்

தமிழ்நாட்டில் டப்பிங் படங்களுக்கே முன்னுரிமை: மன்சூர் அலிகான் ஆவேசம்

மன்சூர் அலிகான் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘அதிரடி’. இதில் மன்சூர் அலிகான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் இவருடன் மௌமிதா, சஹானா, பூவிஷா, காவ்யா, ராதாரவி, செந்தில் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆனால், பெரிய ஹீரோக்கள் படங்கள் ரிலீசாலும், அதிக பட்ஜெட்டில் உருவான மொழி மாற்று படங்களாலும் இப்படம் ரிலீசாகாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தீர்வுகாணும் எண்ணத்தில் தயாரிப்பாளர் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், மன்சூர் அலிகானுக்கு ஆதரவாளர்கள் இல்லாத காரணத்தாலும், தயாரிப்பாளர் சங்கத்தில் பாதுகாப்புக்காக போலீஸ் நிறுத்தப்பட்டிருந்ததாலும் போராட்டத்தை மன்சூர் அலிகான் கைவிட்டிருக்கிறார்.

இது குறித்து மன்சூர் அலிகான் கூறும்போது, ‘நான் நடித்த ‘அதிரடி’ படம் முடிந்து நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ரிலீஸ் செய்ய தியேட்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. டப்பிங் படங்கள் அதிகமாக தியேட்டர்களை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். பிற மொழிகளில் உருவான படங்களுக்கே தமிழ்நாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது வருத்தமளிக்கிறது. என்னுடைய ‘அதிரடி’ படம் இன்றைய சூழ்நிலையில் உள்ள அரசியல் நிலையையும் மக்களுக்கு கருத்து சொல்லும் படமாகவும் உருவாக்கியிருக்கிறேன்’ என்றார்.

“இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீ