திரை உலகில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்த அறக்கட்டளை மூலம் வருடந்தோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளாக இந்த விருதை வழங்கி வருகிறார்கள்.
இந்த ஆண்டு ‘ஹிருதயநாத் மங்கேஸ்கர்’ விருது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்க லதா மங்கேஷ்கரும், ஆஷா போன்ஸ்லேவும் முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான காரணம் குறித்து அவர்கள் கூறி இருப்பதாவது:–
இந்திய இசையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்காகவும், உலக இசையை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காகவும், இந்த ஆண்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு அந்த விருதை வழங்குகிறோம். விருதை ஏ.ஆர்.ரகுமான் பெறுவதில் பெருமைப்படுக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு லதா மங்கேஸ்கர், ஆஷா போன்ஸ்லே ஆகியோர் விருது வங்கும் விழா வருகிற 26–ந்தேதி மும்பையில் நடைபெறுகிறது. இதில் பாலிவுட் திரை உலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.