தனி ஒருவன் வில்லன் கதாபாத்திரத்தை தவறவிட்ட மாதவன்

தனி ஒருவன் வில்லன் கதாபாத்திரத்தை தவறவிட்ட மாதவன்

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘தனி ஒருவன்’. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருந்தார். இதில் அரவிந்த் சாமி நடிப்பு அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரத்தில் முதலில் மாதவன் தான் நடிக்க இருந்ததாம். இதனை மாதவனே உறுதிபட கூறியிருக்கிறார். மாதவன் தன்னுடைய சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இதில் ஒரு ரசிகர், தனி ஒருவன் படத்தின் சித்தார்த் அபிமன்யூ போன்ற வில்லன் பாத்திரங்களில் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு, ‘அந்த ரோலுக்காக முதலில் என்னிடம் கேட்டார்கள். சில காரணங்களால் என்னால் நடிக்க முடியவில்லை. அரவிந்த் அந்த பாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி. அற்புதமான நடிகர்’ என்றார்.

மேலும், அஜித்துக்கு வில்லனாக நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு, ‘யாருக்கு வேண்டுமானாலும் எந்த ரோலிலும் நடிப்பேன், நல்ல கதை அமைந்தால்’ என்று கூறியிருக்கிறார் மாதவன்.