காஜலுடன் மலேசியா செல்லும் விக்ரம் |Kajal to Malaysia with Vikram
விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கி வரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இப்படத்தையடுத்து விக்ரம், ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளார்கள். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவுள்ளது.
இதற்காக படக்குழுவினர் மலேசியா செல்லவுள்ளனர். ஜூன் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தை முடித்து விட்டு இப்படக்குழுவினருடன் விக்ரம் இணையவுள்ளார். கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு ‘மர்ம மனிதன்’ என்ற தலைப்பு வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.