சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

‘போடா போடி’ படத்திற்கு பிறகு சிம்பு நடித்த படங்கள் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக வெளிவரவே இல்லை. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘இங்க என்ன சொல்லுது’, ‘காக்கா முட்டை’ என இவர் கௌரவத் தோற்றத்தில் நடித்த படங்கள் மட்டும் வெளியாகி வந்தன.

இந்த வருடமும் இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படங்கள் வெளிவருமா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது. ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக கடந்த ஜூலை 17-ந் தேதி சிம்பு நடிப்பில் உருவான ‘வாலு’ படத்தை வெளியிடப் போவதாக அறிவித்தனர். அதற்கான விளம்பரங்களிலும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், படம் வெளியாகும் கடைசி நேரத்தில் மேஜிக் ரேஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ‘வாலு’ படம் சிக்கி ரிலீசாகாமல் போனது. இதனால், சிம்புவும், அவரது ரசிகர்களும் மிகுந்த கவலையடைந்தனர்.

இந்நிலையில், சிம்புவுக்கும், அவரது ரசிகர்களுக்கு சந்தோஷம் கொடுக்கும்விதமாக ஒரு செய்தி வெளிவந்தது. அதாவது, ‘வாலு’ படத்துக்கு எதிராக மேஜிக் ரேஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கை அந்நிறுவனம் வாபஸ் பெறப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அப்படி வழக்கை அந்நிறுவனம் வாபஸ் பெறும் பட்சத்தில் இன்னும் மூன்று வாரத்திற்குள் ‘வாலு’ படம் வெளிவரும் என கூறப்படுகிறது. இதனால், சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.