ஆர்யா, அனுஷ்கா மீண்டும் நெருக்கம்?

ஆர்யா, அனுஷ்கா மீண்டும் நெருக்கம்?

ஆர்யா, அனுஷ்கா இடையே மீண்டும் நெருக்கம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் பரவி உள்ளது.

இருவரும் ஏற்கனவே இரண்டாம் உலகம் படத்தில் இணைந்து நடித்தனர். தற்போது இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது.

இரண்டாம் உலகம் படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்திப்பதாகவும் கூறப்பட்டது. அனுஷ்காவை வீட்டுக்கு அழைத்து ஆர்யா பிரியாணி விருந்து கொடுத்தார் என்றும் செய்திகள் பரவின.

அதன் பிறகு திடீரென பிரிந்து விட்டார்கள் காதலும் முறிந்து விட்டதாக கூறப்பட்டது. பிரிவுக்கான காரணம் வெளியாக வில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இஞ்சி இடுப்பாகி படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்கள். தற்போது இருவரும் பழைய காதலை புதுப்பித்து நெருக்கமாகி இருக்கிறார்களாம். அடிக்கடி ரகசியமாக சந்தித்து பேசுவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆர்யாவுடன் நிறைய நடிகைகள் இணைத்து பேசப்பட்டனர். நயன்தாராவுடனும் கிசு கிசுக்கப்பட்டார். பிடித்தமான நடிகைகளை வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து வசியப்படுத்துவதாகவும் பேசினர்.

இதையெல்லாம் அவர் மறுத்தார். எல்லோருடனும் நட்பாகத்தான் பழகுகிறேன் என்றும் கூறினார்.

அனுஷ்காவுக்கு வயதாவதால் திருமணத்தை உடனடியாக முடித்து விட பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். மாப்பிள்ளையும் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் ஆர்யாவையும் அனுஷ்காவையும் இணைத்து கிசு கிசுக்கள் வந்துள்ளது. தெலுங்கு இணையதளங்களில் இந்த செய்தி பரவியுள்ளது.