தொடர்ந்து 72 மணி நேரம் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட கிருஷ்ணா

.

‘கழுகு’ படம் மூலம் பெயர் பெற்றவர் கிருஷ்ணா. இப்படம் அதிகம் வரவேற்பு பெற்றதால் தொடர்ந்து ‘யாமிருக்க பயமே’, ‘வானவராயன் வல்லவராயன்’, ‘வன்மம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது யட்சன், விழித்திரு, கிரகணம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களுக்காகவும் தொடர்ந்து இடைவிடாது 72 மணி நேரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனது காட்சிகளை முடித்து கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து கிருஷ்ணா கூறும்போது, ‘யட்சன்’ படத்திற்கு என்னுடைய பகுதியை முடிக்க வேண்டியதிருந்தது. ‘விழித்திரு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகளும் நடந்து வருகின்றன.

தேதிகள் இல்லாத காரணத்தால் ஏப்ரல் 18, 19 என தொடர்ந்து இரண்டு நாட்கள் ‘யட்சன்’ மற்றும் ‘விழித்திரு’ படங்களுக்கும் இரவு நேரங்களில் ‘கிரகணம்’ படத்திற்கும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது. ஏப்ரல் 20ஆம் தேதி காலை வரையும் படப்பிடிப்பு நீடித்தது.

இது நிதமும் நடக்கக் கூடிய நிகழ்வு அல்ல. இப்படி ஷூட்டிங் என அங்குமிங்குமாய் பறப்பது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. எனினும், அலைச்சலால் என் உடல்நிலைக் கெடாமல் பார்த்துக் கொண்டேன். இந்த மூன்று நாட்களும் எனக்கு உறுதுணையாய் இருந்த அனைத்து படக் குழுவினருக்கும் நன்றி, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *