தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாறவேண்டும் : கமல் கோரிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாறவேண்டும் : கமல் கோரிக்கை
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் தொடங்கிய தேர்தல் இன்று மாலை வரை நடைபெறுகிறது. இன்று மாலையே இறுதி முடிவும் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இதையொட்டி, காலை முதலே பல்வேறு முன்னணி நடிகர்களும், நடிகையரும் நேரில் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். ரஜினி, சிவகார்த்திகேயன், விஜய் ஆகியோர் காலை 7.30 மணிக்கெல்லாம் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்துவிட்டு சென்றுவிட்டனர்.

நடிகர் கமல் சரியாக 11.40 மணியளவில் இந்த தேர்தலில் ஓட்டுபோடுவதற்காக நடிகை கவுதமியுடன் வந்திறங்கினர். அவர், நேராக வாக்குச்சாவடிக்குள் நுழைந்து தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களை சந்திக்கும்போது, பல பெரியவர்கள் ஆசையுடன் எழும்பிய சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம். இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவரும் ஒன்று சேரவேண்டும். தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய அளவில் பேசப்படவேண்டும். எனவே, தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய நடிகர் சங்கம் என்று மாறவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.