ரொமாண்டிக் ஹீரோவாக நடிக்கும் மொட்டை ராஜேந்திரன்

ரொமாண்டிக் ஹீரோவாக நடிக்கும் மொட்டை ராஜேந்திரன்

‘நான் கடவுள்’ படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் ராஜேந்திரன். இப்படத்தின் இவருடைய வில்லத்தனம் அனைவராலும் ரசிக்கப்பட்டது. வில்லனாக கவர்ந்த இவர் ‘ராஜா ராணி’, ‘இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ படத்தில் காமெடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது ரொமாண்டிக் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருப்பையா முருகன் என்பவர் தயாரித்து இயக்கும் ‘யானை மேல் குதிரை சவாரி’ என்ற படத்தில் ராஜேந்திரன் ரொமாண்டிக் ஹீரோவாக நடிக்கவுள்ளார். லொள்ளு சபா சாமிநாதனும், ராஜேந்திரனும் ஒரே பெண்ணை காதலிப்பதாகவும், அதில் ராஜேந்திரன் வெற்றி பெறுவதும் போன்றும் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரொமான்ஸ் கேரக்டரில் நடிப்பது தனக்கு புதிய அனுபவமாக இருந்ததாக ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

என்னால் முடிந்த அளவு ரொமான்ஸ் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளதாக கூறிய ராஜேந்திரன், இந்த கேரக்டர் நன்றாக இருக்க இயக்குனர் செய்த முயற்சிகளே காரணம் என்றும் கூறினார். ரொமான்ஸ் கேரக்டரில் நான் நடித்திருந்தாலும், இந்த படத்தின் ஹீரோ நான் இல்லை’ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.