சிம்புவின் கான் படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு

சிம்புவின் கான் படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு

சிம்பு தற்போது கவுதம்மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் ‘கான்’ படத்தில் நடித்து வந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா மற்றும் டாப்சி ஆகியோர் நடித்து வருகின்றனர். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது, திடீரென இப்படத்தின் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். நிதி நெருக்கடி காரணமாக இப்படத்தை நிறுத்தி வைத்துள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். மேலும் ‘கான்’ படப்பிடிப்பு அடுத்த வருடம்தான் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், சிம்பு மற்றும் ‘கான்’ படக்குழுவை தான் மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் கூறியுள்ளார்.

‘கான்’ படத்தை செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியும், சித்தார்த் ராவும் இணைந்து க்ளோ ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கின்றனர். ஏற்கெனவே, சிம்பு நடித்த ‘வாலு’ மற்றும் ‘இது நம்ம ஆளு’ ஆகிய படங்களும் இதுபோன்று நிதி நெருக்கடி காரணமாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.