தள்ளிப் போகிறதா சிவகார்த்திகேயன் படம்?

தள்ளிப் போகிறதா சிவகார்த்திகேயன் படம்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ரஜினிமுருகன்’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோரும் நடித்துள்ளனர். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் லிங்குசாமி தயாரித்துள்ளார்.

இப்படம் வருகிற ஜுலை 17-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்து வந்தனர். அன்றைய தேதியில் தனுஷின் மாரி படமும், சிம்புவின் வாலு படமும் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில் இருந்து முதலில் மாரி படம் விலகிக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், இதை படக்குழுவினர் மறுத்தனர். திட்டமிட்டபடி ஜூலை 17-ந் தேதி மாரி வெளியாகும் அறிவித்தனர்.

இந்நிலையில், தற்போது இந்த போட்டியில் இருந்து சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ விலகியிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளது. லிங்குசாமி தயாரிப்பில் வெளிவந்த ‘உத்தமவில்லன்’ படத்துக்கு எழுந்த பிரச்சினை, தற்போது, இந்த படத்திற்கும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, படத்தின் வெளியீட்டு தேதியை ஆகஸ்ட் 14-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என நம்பப்படுகிறது.