மணிரத்னம் இயக்கத்தில் தனுஷ்?

“ஓகே கண்மணி’ படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் மணிரத்னம் இயக்கவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் இந்த படத்தில் நானி, நித்யாமேனன் நடிக்கவுள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையும், நீரவ் ஷா ஒளிப்பதிவும் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் மணிரத்னம், இந்த படத்தை தவிர இன்னொரு ஸ்கிரிப்டையும் தயார் செய்து வைத்திருப்பதாகவும், அந்த ஸ்கிரிப்ட்டுக்கு தனுஷ் பொருத்தமாக இருப்பார் என்று அவர் கருதியதால், தனுஷிடம் முதல்கட்ட பேச்சுவார்த்தையை அவர் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், தனுஷும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே மணிரத்னம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கிளம்பிய வதந்தி தற்போது உண்மையாக போகிறது. நானி-நித்யாமேனன் படத்தை முடித்துவிட்டு, மணிரத்னம், தனுஷ் படத்தை இயக்குவது உறுதி என கோலிவுட் வட்டாரங்களில் செய்தி வெளியாகி வருகிறது.