சினிமா தயாரிப்பாளர் புவனேஸ்வர் என்பவர் ரூ.42 லட்சத்துக்கு அதனை வாங்க முன் வந்தார். முன்பணமாக ரூ.2.7 லட்சத்தை ராஜமவுலியிடம் கொடுத்தார். பின்னர் விசாரித்ததில், அந்த அபார்ட்மெண்ட் சட்ட விரோதமாக கட்டப்பட்டது என்பதும் தெரியவந்தது. ராஜமவுலி பெயரில் மின்சார இணைப்பு இல்லை என்பதால் அதோடு 4 ஆண்டுகளான அதற்கு சொத்து வரி கட்டவில்லை என்பதும், அந்த கட்டிடத்தின் பெயரில் கடன் இருப்பதும் புவனேஸ்வருக்கு தெரியவந்தது.
இது குறித்து அவர் ராஜமவுலியிடம் கேட்டார். அதற்கு பதில் சொல்லாத ராஜமவுலி அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்று விட்டார். இதனால் ராஜமவுலி மீது புவனேஸ்வர் நாம்பல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ராஜமவுலி என்னை ஏமாற்றி பணம் பறித்ததாக கூறி இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி கோர்ட்டு 3 முறை ராஜமலிவுக்கு நோட்டீசு அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராக வில்லை.
இதையடுத்து அவருக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. 24–ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராகும்படி அதில் கூறப்பட்டு உள்ளது. மேலும் கோர்ட்டு உத்தரவுபடி நாம்பல்லி போலீசார் ராஜமவுலி மீது 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.