ரஜினி துரியோதனன் என்றால் நான்தான் கர்ணன்: தெலுங்கு நடிகர் மோகன்பாபு

ரஜினி துரியோதனன் என்றால் நான்தான் கர்ணன்: தெலுங்கு நடிகர் மோகன்பாபு

ரஜினி இடைவிடாது படப்பிடிப்பில் கலந்துகொண்ட காரணத்தால் சிறிது ஓய்வு எடுப்பதற்காக சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பினார். சென்னை திரும்பியதும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், அவருடைய நெருங்கிய நண்பரும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகருமான மோகன்பாபு, சமீபத்தில் ரஜினியை சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார். ரஜினியுடனான சந்திப்பு குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறும்பேது, ‘‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது பிரியத்திற்குரிய சகோதரி லதாவை சந்தித்தேன். லதா இல்லாமல் ரஜினி இவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கமுடியாது. என்னுடைய நெருங்கிய நண்பனுடன் நேரத்தை இனிமையாக செலவு செய்தேன். அவர் ராஜா போல் தோற்றமளிக்கிறார். இந்த கலியுகத்தில் அவர் துரியோதனன் என்றால், நான்தான் கர்ணன்” என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினி தனக்கு படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் எல்லாம் பெங்களூருவில் உள்ள மோகன்பாபுவின் பண்ணை வீட்டில்தான் ஓய்வெடுப்பார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

The post ரஜினி துரியோதனன் என்றால் நான்தான் கர்ணன்: தெலுங்கு நடிகர் மோகன்பாபு appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
ரஜினி துரியோதனன் என்றால் நான்தான் கர்ணன்: தெலுங்கு நடிகர் மோகன்பாபு