என் மனதை பாதித்த சம்பவங்களையே அப்பா படத்தின் கதையாக உருவாக்கினேன்: சமுத்திரக்கனி

என் மனதை பாதித்த சம்பவங்களையே அப்பா படத்தின் கதையாக உருவாக்கினேன்: சமுத்திரக்கனி

திரைப்பட இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான சமுத்திரக்கனி சமீபத்தில் தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம் அப்பா. இந்த திரைப்படம் ஈரோட்டில் 3 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு உள்ளது. ரசிகர்களை கவர்ந்து உள்ள அப்பா திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களை நேரில் சந்திக்கும் வகையில் சமுத்திரக்கனி மற்றும் அப்பா திரைப்பட நடிகர் குழுவினர் 8-ந்தேதி ஈரோடு வந்தனர். பின்னர் அவர்கள் திருப்பூர் புறப்பட்டு சென்றனர். முன்னதாக திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அப்பா திரைப்படத்தின் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதைப்பற்றி கூறுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. படத்தை பார்ப்பதற்காக குழந்தைகளும், பெண்களும் கூட்டம் கூட்டமாக வருவதை பார்க்கிறேன். அவர்களுக்கான படத்தை எடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் நான் இந்த படத்தை எடுத்தபோது பலருக்கும் நம்பிக்கை இல்லை. அப்பா என்ற பெயரே நன்றாக இல்லை என்றும் கூறினார்கள். ஆனால் எனக்கு அப்பா என்ற வார்த்தையின் வலிமை தெரியும்.

The post என் மனதை பாதித்த சம்பவங்களையே அப்பா படத்தின் கதையாக உருவாக்கினேன்: சமுத்திரக்கனி appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
என் மனதை பாதித்த சம்பவங்களையே அப்பா படத்தின் கதையாக உருவாக்கினேன்: சமுத்திரக்கனி