ஆண்டிகள் என்று கூறியதற்கு வருத்தம் தெரிவித்த சிவக்குமார்

ஆண்டிகள் என்று கூறியதற்கு வருத்தம் தெரிவித்த சிவக்குமார்

நடிகர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- இளவயதிலேயே குடும்பத்தை விட்டு ஊர் ஊராக அலைந்து, பந்த பாசம் துறந்து வாழ்ந்தவர்கள் டைரக்டர் ராஜுமுருகனும், ஹீரோ குரு சோமசுந்தரமும். அகோரிகள், பாலைவனத்தில் வசிப்பவர்கள் என பலரோடு தங்கி அனுபவம் பெற்றவர்கள் என்பதைச் சொல்லும்போது ஆண்டிகளாக வாழ்ந்த இரண்டு பேர் சேர்ந்து ‘ஜோக்கர்’ படம் எடுத்திருக்கிறார்கள் என்று பேசியிருந்தேன். இறைவன் படைப்பிலே அனைவரும் சமம் என்று நினைப்பவன் நான்.. நான் அறியாமல் பேசியது ஆண்டிப்பண்டாரம் என்று ஒரு பிரிவு மக்களை நோகச் செய்திருக்கிறது என்று தெரிவிப்பதால், அவர்கள் மனதைப் புண்பட வைத்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆண்டிகள் என்று கூறியதற்கு வருத்தம் தெரிவித்த சிவக்குமார் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
ஆண்டிகள் என்று கூறியதற்கு வருத்தம் தெரிவித்த சிவக்குமார்