இந்தியாவின் டிரான்ஸ்போர்ட்டர் யார்? தேடுதல் வேட்டை

இந்தியாவின் டிரான்ஸ்போர்ட்டர் யார்? தேடுதல் வேட்டை

பிரபல ஹாலிவுட் படமான ‘டிரான்ஸ்போர்ட்டர்’ படத்தின் நான்காவது பாகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களிலும் நடித்த நாயகன் ஜேசன் ஸ்டேத்தம், உலக அளவில் பிரபலமாக இத்திரைப்படம் காரணமாக இருந்தது. தற்போது நான்காவது பாகத்திற்கு எட் ஸ்கெரின் என்பவர் புதிய நாயகனாக இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் உலக மக்களைக் கவர்ந்த இந்தப்படத்தை இந்தியிலும் எடுப்பதற்கான முயற்சியில் நடிகர் மற்றும் இயக்குனரை தேர்வு செய்யும் வேலை தொடங்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறுபவர்களைப் பற்றி அடுத்த ஆண்டுக்குள் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் இந்திய ஹீரோ கதாபாத்திரத்துக்கு, இந்தியின் பிரபல ஆக்‌ஷன் நாயகர்களான அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார் மற்றும் வருண் தவான் போன்றோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பாலிவுட் வட்டாரத்தில் கருத்து நிலவி வருகிறது.

டிரான்ஸ்போர்ட்டர், எந்தக் கேள்வியும் கேட்காமல், தனக்கென சில கொள்கைகளை வைத்துக் கொண்டு அதன்படி காரில் பொருட்களை எடுத்து செல்வதை தனது வேலையாக வைத்திருப்பார். தற்காப்பு கலையில் வல்லுனரான அவர், தனது கொள்கையை மீறி கொண்டு செல்லும் பொருளைப் பார்த்துவிடுவதால் தோன்றும் பிரச்சனைகளை சமாளிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளோடு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

விரைவில் தயாராகப்போகும் ஆக்‌ஷனைக் கொண்ட ‘டிரான்ஸ்போர்ட்டர்’ படத்துக்கு தயாராகுங்கள் ரசிகப் பெருமக்களே!