ஆர்யாவும் விஷாலும் நல்ல நண்பர்கள். இவர்கள் சினிமாவை தாண்டி நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள். அவர்களின் படங்கள் வெளியாகும் போது ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் கூறுவது, மற்றும் படங்கள் தொடர்பான விழாக்களில் கலந்துக் கொள்வது வழக்கம்.
ஆனால், தற்போது விஷால் தனது நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘பாயும் புலி’ படத்தின் விழாவிற்கு ஆர்யாவை வரவேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு முன்னதாக, ஆர்யா, ‘எங்கள் அண்ணன் புரட்சி தளபதி விஷாலின் ‘பாயும் புலி’ இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. கண்டிப்பாக விழாவில் கலந்துக் கொள்வேன்’ என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, விஷால், ‘மை டியர் ஜமி தயவு செய்து என்னுடைய இசை வெளியீட்டு விழாவிற்கு வராதே. கடந்த முறை நீ கலந்துக் கொண்ட என் விழாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டாய். ஆதலால் இந்த விழாவில் கலந்துக் கொள்ளாதே’ என்று கூறியிருக்கிறார்.
‘பாயும் புலி’ படத்தை சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது.