இரண்டு குழந்தைகளுடன் நடிக்கும் சூர்யா-அனுஷ்கா

இரண்டு குழந்தைகளுடன் நடிக்கும் சூர்யா-அனுஷ்கா

ஹரி இயக்கத்தில் சூர்யா-அனுஷ்கா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சிங்கம்’. ஆக்‌ஷன் கதைக்களத்தோடு வெளியான இப்படம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘சிங்கம் 2’ உருவானது. இதிலும் அனுஷ்கா ஜோடியாக நடித்திருந்தார்.முதல் பாகத்தில் சூர்யாவிற்கும் அனுஷ்காவிற்கும் திருமணம் நடந்ததாக கிளைமாக்சில் காண்பித்தார்கள். ஆனால், இரண்டாம் பாகத்தில் திருமணம் நடக்காத மாதிரி படமாக்கியிருப்பார்கள். இது ரசிகர்களிடையே கிண்டலுக்கு ஆளானது. இருந்தாலும் இந்த இரண்டு பாகமும் சூப்பர் ஹிட்டாகி வசூலிலும் சாதனை படைத்தது.

தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளது. இந்த பாகத்தில் சூர்யா-அனுஷ்காவிற்கு ஹரி திருமணம் செய்து வைக்கவுள்ளாராம். மேலும் இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது போன்று படத்தை எடுக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.