சிம்பு படத்தை தடுக்கிறேனா?: உதயநிதி அதிரடி

சிம்பு படத்தை தடுக்கிறேனா?: உதயநிதி அதிரடி

சிம்பு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வாலு’. இப்படம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தது. கடைசியாக மேஜிக் ரேஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கால் கடந்த மாதம் வெளியாக வேண்டிருந்த படம் மீண்டும் தள்ளிப்போனது. பின்னர் விஜய் தலையீட்டு இப்பிரச்சனை சுமூகமாக தீர்க்க உதவி செய்தார். சமீபத்தில் உயர்நீதி மன்றமும் இப்படம் மீதுள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்தது.

இதையடுத்து இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சிம்பு, ‘இன்னும் சிலர் ‘வாலு’ படத்தை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் உங்களால் படத்தை தடுக்க முடியாது. என்னை விரும்பும் ரசிகர்கள் என்னிடம் இருக்கிறார்கள். மேலும் ஆண்டவன் அவர்களுக்கு பதில் சொல்வான்’ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து சிம்புவின் ரசிகர்கள் ‘வாலு’ படத்தை உதயநிதி தடுப்பதாக கூறி டுவிட்டரில் டிரெண்டாக்கி பதிவு செய்து வந்தனர். இதையறிந்த உதயநிதி ‘‘வாலு’ படத்தை நான் ஏன் தடுக்கனும். ஏதாவது லாஜிக் இருக்கா? உங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் முன் யோசியுங்கள் என்றார். மேலும் நான் எந்த நடிகருக்கும் நடிகரின் ரசிகர்களுக்கும் எதிரி இல்லை. உங்கள் மூளையை உபயோகித்த பின்னர் கருத்துக்களை தெரிவியுங்கள்’’ என்றார்.