கௌதம் சிம்பு படம் – நாயகி பல்லவி சுபாஷ் நீக்கம்
என்னை அறிந்தால் படத்துக்கு முன்பு கௌதம் சிம்புவை வைத்து ஒரு படத்தை தொடங்கினார். என்னை அறிந்தால் வாய்ப்பு கிடைத்ததும் அதனை நிறுத்தி வைத்தார்.
தற்போது அந்தப் படம் மீண்டும் டேக் ஆஃப் ஆகியுள்ளது.
அச்சம் என்பது மடமையடா என பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தில் பல்லவி சுபாஷ் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் படத்தில் இல்லை.
கௌதம் திடீரென என்னை அறிந்தால் படத்துக்குப் போனதால் பல்லவி சுபாஷ் தந்த தேதிகள் வீணாகிவிட்டதாகவும், தற்போது அவர் வேறு வேலைகளில் பிஸியாக இருப்பதால் மீண்டும் கால்ஷீட் தரவில்லை எனவும் கூறப்படுகிறது.
தற்போது வேறு நாயகியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.