வாலு வெற்றிபெற ஷீரடி சாய்பாபா கோயிலில் சிம்பு பிரார்த்தனை

வாலு வெற்றிபெற ஷீரடி சாய்பாபா கோயிலில் சிம்பு பிரார்த்தனை

சிம்பு நடிப்பில் கடந்த மூன்று வருடங்களாக எந்த படமும் வெளியாகாத நிலையில், இவர் நடித்து வந்த ‘வாலு’ படம் இரண்டு வருடங்களாக பல பிரச்சனைகளை சந்தித்து வந்தது. ஒரு வழியாக ‘வாலு’ படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு நாளை வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் வெற்றிக்காக சிம்புவுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். இப்படம் வெளிவருவதற்கு விஜய் உதவி செய்தார். மேலும் ரஜினிகாந்த் சிம்புவுக்கு போனில் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் கூறினார். இதுதவிர, பல்வேறு தரப்பினரும் சிம்புவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படம் வெளிவருவதை முன்னிட்டு சிம்பு ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சிறப்பு பிரார்த்தனையில் சிம்பு ஈடுபட்டிருக்கிறார். சமீபகாலமாக சிம்பு தீவிர ஆன்மிகத்தில் ஈடுபட்டு வருகிறார். மூன்று வருடங்கள் கழித்து தன்னுடைய நடிப்பில் உருவான படம் வெளியாவதால், அந்த படம் வெற்றியடைய சாய்பாபாவை வேண்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.