சரத்குமார் அணி சார்பில் ராதாரவி, சிம்பு இன்று மனு தாக்கல்

சரத்குமார் அணி சார்பில் ராதாரவி, சிம்பு இன்று மனு தாக்கல்

தென் இந்திய நடிகர் சங்க தேர்தல் சூடு பிடித்துள்ளது. சரத்குமார், விஷால் அணிகள் மோதுகின்றன. சரத்குமார் மீண்டும் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். நேற்று அவர் மனு தாக்கல் செய்தார். இந்த அணி சார்பில் விஜயகுமார் துணைத்தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தார்.

இன்று காலை நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட அந்த அணியினர் தலைவர், பொது செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மனு தாக்கல் செய்தனர். மாலை ஆலோசனைகள் நடத்துகிறார்கள். இந்த நிலையில் சரத்குமார் அணி சார்பில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ராதாரவி, துணைத் தலைவர் பதவிக்கு சிம்பு, பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர். கண்ணன் ஆகியோர் இன்று மதியம், நடிகர் சங்க தேர்தல் அலுவலகம் சென்று மனு தாக்கல் செய்தனர்.

இவர்களுடன் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு டி.பி.கஜேந்திரன், ராம்கி, கே.ராஜன், ரவிக்குமார், பசிசத்யா, மதுரை கலைமணி, புதுக்கோட்டை இசையரசன், நாமக்கல் ராஜேந்திரன், திருச்சி மஸ்தான், மோகன் ராம், ஜாக்குவார் தங்கம், எம்.ஏ.ராஜேந்திரன், ஜெயமணி, கே.ஆர்.செல்வராஜ் உள்ளிட்டவர்கள் மனுதாக்கல் செய்தனர். இரண்டு அணியினரும் இன்று வேட்பு மனுதாக்கல் செய்ததால் நடிகர் சங்க தேர்தல் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.