எலிகளுக்கு நடுவே நடனமாடிய சஞ்சிதா ஷெட்டி
சூது கவ்வும்’ படம் மூலம் புகழ் பெற்றவர் சஞ்சிதா ஷெட்டி. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இப்படத்தையடுத்து பீட்சா 2 ‘வில்லா’ படத்தில் நடித்தார். தற்போது ‘என்னோடு விளையாடு’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தை அருண் கிருஷ்ணசாமி இயக்கி வருகிறார். இதில் பரத், ‘மதயானைக்கூட்டம்’ கதிர், சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்திற்காக சமீபத்தில் சஞ்சிதா ஷெட்டியின் பாடல் ஒன்று படமாக்கப்பட்டது.
பாழடைந்த பங்களா ஒன்றில் எலிகள் அங்குமிங்கும் ஓடும் இடத்தின் நடுவே சஞ்சிதா நடனம் ஆடுவது போன்று காட்சி அமைத்தார்களாம். இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது எலிகளைப் பார்த்து மிரண்டுபோன சஞ்சிதா, இந்த பாடல் காட்சியில் நடனம் ஆடமாட்டேன் என்று கூறினாராம். பின்னர் படக்குழுவினர் சமரசம் செய்ய, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடித்துக் கொடுத்தாராம்.