ராதாரவி மீது பூச்சி முருகன் போலீசில் புகார்

ராதாரவி மீது பூச்சி முருகன் போலீசில் புகார்
நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி சார்பில் போட்டியிடும் ராதாரவி மீது பூச்சி முருகன் மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு அளித்தார். அதில், ‘‘தன்னை மிரட்டும் வகையில் பேசிய ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பூச்சி முருகன் கூறியதாவது:–

நேற்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராதாரவி எனது பெயரை குறிப்பிட்டு நசுக்கி விடுவதாக வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.

நாளை சங்க தேர்தல் நடைபெறும் நிலையில் அவரது பேச்சால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கும், எனது குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

துணை கமிஷனரிடம் அளித்த புகார் மனுவை கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் அளித்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.