‘மாரி’ படம் வெளியீட்டு தேதி அறிவித்த பின்னர், சிம்பு தன்னுடைய நடிப்பில் உருவாகியிருந்த வாலு படத்தையும் ஜூலை 17-ந் தேதியே வெளியிடுவதாக அறிவித்தார். இதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ படத்தையும் ஜூலை 17-ந் தேதி வெளியிடுவதாக அறிவித்ததால் ‘மாரி’ படத்தின் ரீலீஸ் தேதியை மாற்றி வைத்ததாக கூறப்பட்டது.
அதுமட்டுமில்லாமல், ‘மாரி’ படத்தின் சில காட்சிகள் படக்குழுவிருக்கு திருப்தி தராததால் அந்த காட்சிகளை மறுபடியும் படப்பிடிப்பு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இதுபோன்ற செய்திகளுக்கு இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திட்டமிட்டப்படி ‘மாரி’ படம் ஜூலை 17-ந் தேதி வெளிவரும் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே, எல்லோரும் எதிர்பார்த்தபடி, வருகிற ஜூலை 17-ந் தேதி தனுஷ்-சிம்பு-சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களிடையே கடும் போட்டி உருவாவது உறுதியாகியுள்ளது.