விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள அக்டோபரில் ரிலீஸ்

விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள அக்டோபரில் ரிலீஸ்

‘ஐ’ படத்துக்குப் பிறகு விக்ரம்–சமந்தா ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் ‘பத்து எண்றதுக்குள்ள’ இயக்குனர் முருகதாஸ் பாக்ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையில் இந்த படம் தயாராகி இருக்கிறது. இந்த படம் எப்போது வெளியாகும் என்பது முடிவு செய்யப்படாமல் இருந்தது.

இப்போது அக்டோபர் 21–ந் தேதி நவராத்திரி தினத்தில் உலகம் எங்கும் ‘ரிலீஸ்’ செய்வது என்று முடிவு செய்துள்ளனர். படத்தின் அனைத்து வேலைகளும் பெரும்பாலும் முடிவடைந்து விட்டன. எனவே, அக்டோபரில் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

‘பத்து எண்ணுறதுக்குள்ள’ ரிலீஸ் தேதி முடிவாகி விட்டதால் படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று எண்ணத் தொடங்கி இருக்கிறார்கள்.