கணவருடன் களம் இறங்கும் நஸ்ரியா

கணவருடன் களம் இறங்கும் நஸ்ரியா

‘நேரம்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நஸ்ரியா. மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கதாநாயகி அந்தஸ்தை பெற்ற இவர் ‘ராஜா ராணி’, ‘வாயை மூடி பேசவும்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் பட உலகிலும் முக்கிய இடம் பிடித்தார்.

இந்த நிலையில் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆனார். மலையாள நடிகர் பகத்பாசிலை கைப்பிடித்தார். கடந்த ஒரு வருடமாக அடக்க ஒடுக்கமான குடும்பப்பெண்ணாக இருந்தார்.

இப்போது மீண்டும் அவரது பார்வை சினிமாவை நோக்கி திரும்பி இருக்கிறது. கணவர் பகத்பாசிலுடன் சேர்ந்து புதிய மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதன் மூலம் மீண்டும் மலையாள நாயகியாக நஸ்ரியா வலம் வர இருக்கிறார்.

தயாரிப்பாளரும் இயக்குனருமான அன்வர் ரஷீத் இயக்கத்தில் கணவன்–மனைவி இருவரும் நடிக்க உள்ளனர்.