விஜய் ரசிகர்களுக்கு அக்டோபர் 17ம் தேதி விருந்து கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ்

விஜய் ரசிகர்களுக்கு அக்டோபர் 17ம் தேதி விருந்து கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ்

‘புலி’ படத்திற்குப் பிறகு விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் சிவாஜி இல்லத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை விஜய் 59 என்று அழைத்து வருகிறார்கள்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைப்பது 50வது படமாகும். இதனால் இப்படங்களின் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஏற்கனவே விஜய் நடித்த ‘தலைவா’ படத்தில் ‘வாங்கண்ணா…’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. தற்போது இதை விட சிறப்பான பாடல் ஒன்றுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த பாடல் ‘உலக லோக்கல் தர டிக்கெட்’ வகையை சார்ந்ததும் என்றும், இதற்கான பாடல் வரிகளை அக்டோபர் 17ம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்து வருகிறார். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார்.