முதலிரவு முத்தம் சுவைத்துப்பாருங்கள்

காதல் அடுத்து கலியாணம் அடுத்து முதலிரவு. சாந்தி முகூர்த்தம் என்று அதற்கு சம்பிரதாயப் பெயர் வேறு. சாந்தி என்றால் என்னவென்று ராணியைக் கேட்டாராம் ராணி தாணும் அந்தக் கேள்வியையே ராஜாவைக் கேட்டாராம் என்கிறது பழைய திரைப் படப் படல் வரிகள். தடையற்ற உடலுறவு மேலை நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் தமிழ்ச் சமூகம் திருமணத்திற்கு முந்திய உறவை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறது.

திருமணத்திற்குப் பின் வரும் முதலிரவு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பால் மயக்கங்களின் வெளிப் பாடாகவும் கலவியில் பேரின்பம் காணும் அற்புதப் பேறாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு மதமும் மதத் தன்மைகளை உள் வாங்கிக் கொண்ட சமூகமும் புனிதத் தன்மையையும் தெய்வீகத் தன்மையையும் கட்டிவிட்டுள்ளன.

முதலிரவுக் காட்சிகளை நமது திரைப்படங்கள் காட்டும் முறை அலாதியானது. மணப்பெண் கவிழ்ந்த முகத்தோடு தடம் பார்த்து பால் செம்புடன் வருவாள். அதற்காகவே காத்திருந்த ஆண் தனது ஆண்மையைக் காட்ட வெளிக்கிடுவான். பெண் தயங்குவாள், கண்கள் சந்திக்கும், இதழ்கள் உறிஞ்சத் துடிக்கும், பெண்ணின் ஆடை விலகும், அடுத்து விளக்கு அணைக்கப் படும்.

நாணுவதும் தயங்குவதும் சிணுங்குவதும் பெண்மை என்றும் இழுப்பதும் கட்டிப் பிடிப்பதும் முத்தமிடுவதும் ஆண்மை என்றும் எழுதப் படாத விதிகளுக்கு திரைப்படங்களும் தீனி போடுகின்றன. திரைப் படங்களைப் பார்த்து கற்பனையில் வாழும் நம்மவர்க்கோ முதலிரவில் இந்தக் காட்சி மனத் திரையில் ஓடத் துடங்கும். தங்களின் பல நாள் ஆசையை ஒரே நாளில் தீர்த்து விடுவார்கள்.

ஆனால் மருத்துவம் முதலிரவால் ஏற்படும் சில பக்க விளைவுகளை பட்டியலிடுகிறது. முதலிரவில் உடலுறவை தவிர்க்க வேண்டும் என்பதற்கு பல சுகாதாரக் காரணங்களை அது குறிப்பிடுகிறது. திருமணத்திற்கு முந்திய நாள்களில் பெண்ணும் மாப்பிள்ளையும் அது தொர்பான வேலைகளால் பல விதமான அலைச்சல்களுக்கு உள்ளாகிறார்கள்.

திருமணத்திற்கு முதல் நாள் இந்த அலைச்சல்களால் ஏற்பட்ட களைப்பும் அழுத்தமும் சற்று அதிகமாகவே காணப் படுகின்றன. அர்த்தமற்ற சடங்குகள் என்று எங்களைப் போன்றவர்கள் கூறினாலும் பெரியவர்களின் வற்புறுத்தல்களால் சடங்குகள் பெண்ணையும் மாப்பிள்ளையையும் வாட்டி வதைத்து விடுகின்றன.

கூடவே ஐயர் வளர்க்கும் புகையின் எரிச்சல் கழுத்திலிருந்து கால் வரைக்கும் உடுத்தியிருக்கும் மணத் தம்பதியினருக்கு ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் புகை வழியாக அசுத்தத் தூசிகளும் கிருமிகளும் உடலில் படிந்து விடுகின்றன.

மக்கள் நெருக்கத்தால் கிருமிகள் அதிகமாக ஒட்டிக் கொள்வதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் முதலிரவில் உடலுறவைத் தொடங்கும் தம்பதியினர் தாங்கள் அறியாமலே கேடுகளை உள்வாங்கிக் கொண்டு விடுகின்றனர். களைப்பின் மிகுதியால் அவர்களால் எதிர்பார்க்கும் இன்பத்தை அடைய முடியாமலும் போய்விடுகிறது.

காமத்தை வெறும் 10 நிமிட உடலுறவால் மட்டு தீர்த்து விடும் நோக்கம் முழுமையான இன்பத்தை கொடுக்காது. வள்ளுவரின் காமத்துப் பாலில் அந்தப் பெருந்தகையின் குறட்பாக்களே பெண்ணுக்கும் ஆணுக்கும் உண்மையான இன்பக் கருத்துகளை வாரி வழங்குகின்றன. தகை அணங்குறுத்தல் குறிப்பறிதல் காதல் ஊடல் என்று காமத்தை கண்ணிலிருந்து தொடங்கி இறுதியில்

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் (குறள் 1330) என்று இறுதியாக உடலுறவில் முடிக்கிறார்.

மருத்துவமும் வள்ளுவமும் கூறும் அறிவுரையின் படி நாமும் நடப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *