சூது கவ்வும் 2ம் பாகத்தை எடுக்கும் சி.வி.குமார்

சூது கவ்வும் 2ம் பாகத்தை எடுக்கும் சி.வி.குமார்

விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சூது கவ்வும்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்திருந்தார். மேலும் பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக வெளியான இப்படத்தை சி.வி.குமார் தயாரித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே படக்குழு மீண்டும் ஒரு புதுபடம் மூலம் இணைந்து படத்தை முடித்திருக்கிறார்கள். இதிலும் விஜய் சேதுபதியே நாயகனாக நடித்துள்ளார். சி.வி.குமாரே தயாரித்திருக்கிறார்.

தான் தயாரிக்கும் படங்களைப் பற்றி சி.வி.குமார் கூறும்போது, ‘நான் தற்போது ‘சூது கவ்வும்’ படத்தின் 2ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அதுபோல், சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களின் வரவேற்பு பெற்று வரும் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் 2ம் பாகத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. மேலும், ‘தெகிடி’ படம் போல் துப்பறியும் படத்தை தயாரிக்கவும் இருக்கிறேன்’ என்றார்.