மாரி படக்குழுவினருக்கு தங்க செயின் பரிசளித்த தனுஷ்

மாரி படக்குழுவினருக்கு தங்க செயின் பரிசளித்த தனுஷ்

தனுஷ் நடிப்பில் தற்போது ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மாரி’. இப்படத்தை ‘வாயை மூடி பேசவும்’ படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் ரோபோ சங்கர், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் தனுஷ் லோக்கல் ஏரியா தாதாவாக நடித்திருந்தார். படம் முழுவதும் தனுஷ் பின்னாலேயே வரும் ரோபோ சங்கரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. முதல் நாளிலேயே ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றதால், அன்றே படக்குழுவினர் வெற்றி விழாவை கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த வெற்றிக்கு பரிசாக படக்குழுவினருக்கு தங்க செயின் பரிசளித்திருக்கிறார் தனுஷ். படக்குழுவினர்களான இயக்குனர் பாலாஜி மோகன், இசையமைப்பாளர் அனிருத், தனுஷுடன் நடித்த ரோபோ சங்கர், விஜய் ஜேசுதாஸ் உள்ளிட்டோரை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு தங்க செயின் பரிசளித்திருக்கிறார்.