அரவிந்த்சாமியை ரொம்ப பிடிக்கும்: நயன்தாரா

அரவிந்த்சாமியை ரொம்ப பிடிக்கும்: நயன்தாரா

‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்து இருக்கிறார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அரவிந்த் சாமி குறித்து நயன்தாராவிடம் கேட்ட போது…

அரவிந்த் சாமியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அழகான நடிகர். அவரைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நான் ‘தனி ஒருவன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனபோது ஜெயம் ரவி கதாநாயகன் என்று மட்டும்தான் தெரியும்.

இந்த படத்தின் ஷூட்டிங்கிக்கு போன போதுதான், அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கிறார் என்பது தெரியவந்தது. பொதுவாக படங்களில் கதாநாயகியுடன் வில்லன் நடிக்கும் காட்சிகள் வரும். இந்த படத்திலும் அது போன்ற காட்சி உண்டா என்று டைக்ரடர் ராஜாவிடம் கேட்டேன்.

அதற்கு அவர், ‘ஒரே ஒரு காட்சியில் அவருடன் நீங்கள் நடிக்கிறீர்கள்’ என்றார். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவருடன் சேர்ந்து நடிப்பதற்காக வந்த போது மிகவும் ஆர்வமாக இருந்தேன். அரவிந்த் சாமியுடன் சேர்ந்து நடித்த காட்சிகளில் உற்சாகமாக பங்கேற்று நடித்தேன். அவர் சிறந்த நடிகர்.