இவர் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பின்னி மில்லில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, இவரைப் பார்க்க காலையில் இருந்தே அங்கு ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் கூடிவிட்டதாம். அவரது முகத்தை பார்க்க முடியாவிட்டாலும், அவர் வரும் காரையாவது பார்த்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் அலை மோதினார்களாம்.
அதேபோல், இந்த படத்தில் டான்ஸ் மாஸ்டர் ஷோபியின் நடன அமைப்பில் அமைந்துள்ள ஒரு பாடலுக்கு அஜித், செமத்தியான குத்தாட்டம் போட்டுள்ளாராம். அவருடைய ஆட்டத்தை பார்த்து படக்குழுவினரே அசந்து போய்விட்டார்களாம். இதேபோல், மற்றொரு பாடலையும் ஷோபி மாஸ்டரின் நடன அமைப்பில் வெளிநாட்டில் படமாக்கவுள்ளார்களாம். அந்த பாடலை வித்தியாசமான நடனங்களுடன் படமாக்கவுள்ளார்களாம். அது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், அதை சிறப்பாக செய்துகொடுக்க அஜித்தும் முனைப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.
அஜித், இப்போதெல்லாம் தோற்றத்தில் ஹாலிவுட் நடிகர்களை போன்று ஹை லுக்கில் இருக்கிறாராம். அவரைப் பார்ப்பவர்களெல்லாம், அவரிடம் தங்களை பார்க்கும்போது ஹாலிவுட் நடிகர் போன்று தோற்றமளிக்கிறீர்கள் என்று கூறினால், சின்னதாக ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, என்னுடைய மனைவியும் இதேதான் கூறுகிறார். ஆனால், நான் அப்படி இருப்பது அவருக்கு பயத்தை கொடுத்திருக்கிறது. என்னை ஹாலிவுட்டுக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என்ற பயம்தான் என்று சொல்லி, சிரிக்கிறாராம்.
எவ்வளவு சீரியசான விஷயத்தையும் ஜாலியாகவும், எளிதாகவும் எடுத்துக் கொள்வது அஜித்துக்கே உரித்தானது என்றால் அது மிகையல்ல என்பதற்கு இதுவே சான்று.