நடிகர் விஜய் பெற்றோர் பழனி கோவிலில் தரிசனம்

நடிகர் விஜய் பெற்றோர் பழனி கோவிலில் தரிசனம்

நடிகர் விஜய் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர், தாயார் ஷோபா ஆகியோர் நேற்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர்கள் அங்கு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் போகர் சித்தர் சன்னதியில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தனர். இதனை அறிந்த பக்தர்கள் அங்கு திரண்டனர். சிலர் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஆர்.வாடிப்பட்டி தன்னாசியப்பன் கோவிலிலும் அவர்கள் தரிசனம் செய்தனர். அதன்பின்னர் சென்னை புறப்பட்டு சென்றனர்.