தென் சென்னையில் பார்வை இழந்தவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படுகிறது. வட சென்னை சூர்யா ரசிகர்மன்றம் சார்பில் பகல் 12.30 மணிக்கு நாளை பிறக்கும் 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. அன்னதானமும் வழங்குகின்றனர். மத்திய சென்னை சார்பில் மாலை 3 மணிக்கு மாணவ–மாணவிகளுக்கு புத்தக பை , நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
தென் சென்னையில் மாலை 4.30 மணிக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு வடபழனி முருகன் கோவிலில் தங்க தேர் இழுக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்க கவுரவ தலைவர்கள் கே.ராஜ் சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், கே.இ. ஞானவேல்ராஜா, எஸ்.ஆர். பிரகாஷ்பாபு, எஸ்.ஆர். ரமேஷ்பாபு, அகில இந்திய சூர்யா நற்பணி இயக்க தலைவர் ஆ.பரமு, செயலாளர் இரா.வீரமணி, பொருளாளர் எஸ்.ஆர். பிரபு தலைமை மன்ற காப்பாளர் ஆர்.ஏ. ராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.